Monday, January 13, 2014

கணிசப்பாக்கம் (Kanisapakkam): பண்ருட்டி அருகே 5000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது.
குடுவைகள்
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மீன்வளர்ப்புக்காக பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிலத்துக்குள் புதைந்திருந்த பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மக்கிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தாழிகளை ஆய்வு செய்த தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் முதுமக்கள் தாழிகள் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்கள் இதோ...
கணிசப்பாக்கத்தில் கிடைத்துள்ள தாழிகளின் மேல் விளிம்புகளுடன் கூடிய மேல்மூடிகள் உள்ளன. மேலும் தாழிக்குள் 3 அடுக்குகள் கொண்ட மண் தட்டுகளும், சிறு சிறு குடுவைகளும் இருப்பதாக தெரிகிறது. இந்த முதுமக்கள் தாழிகளை நம் முன்னோர்கள் ‘முசுமுசுங்கை சால்’ என்ற வழக்கு சொல்லில் அழைத்தனர்.
எலும்பு கூடுகள்
பழங்காலத்தில் முதுமையடைந்து படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களை பராமரிக்க முடியாமல் அப்போது வாழ்ந்து வந்த மக்கள், இது போன்று தாழிகளில் வைப்பார்கள். அதோடு அவர்கள் பயன்படுத்திய முக்கிய பொருட்கள் மற்றும் உணவினையும் தாழிக்குள் வைத்து மூடி புதைத்து விடுவது வழக்கம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இறந்தவர்களின் எலும்புகூடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கத்தி, ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்கள் மக்கி போய் கிடைத்துள்ளது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது
தாழிக்குள் இருக்கும் மனித எலும்பு கூடுகள் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்குள் மக்கி மண்ணாகி விடும். கணிசப்பாக்கத்தில் கிடைத்த தாழிகளில் எலும்புகூடுகள் உள்பட எந்த பொருளும் இல்லை. இதனால் அவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று கருதபடுகிறது.
பண்ருட்டி அருகே கணிசப்பாக்கத்தில் முதுமக்கள் தாழி கிடைத்ததன் மூலம் இங்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியிருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. இது தவிர தாழிகள் கிடைத்துள்ள இடத்தில் அடி மட்டத்தில் இருந்து 4 அடி வரை களிமண்ணும், அதன் கீழ் 15 அடி வரையில் ஆற்றுமணலும் உள்ளன. இதனால் முந்தைய காலத்தில் கணிசப்பாக்கத்தில் பெரிய ஆறு பாய்ந்தோடியிருக்கலாம், காலப்போக்கில் ஆற்றின் போக்கு மாறியிருக்கலாம் எனவும் தெரிகிறது.

அரிக்கமேடு (ARIKAMEDU)


வணிகம் செய்ய வந்த யவனர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அவர்களே இங்கு கலை வளர்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தனர். 'யவனர் போல முயற்சிகொள்’ என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளது முக்கியமானது. யவனர்களில் ஒரு பிரிவினர் கொங்கணக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தும் இருக்கின்றனர். வணிகர், படைவீரர், கலைஞர், தூதுவர், கொடையாளி, குறுநில மன்னர் எனப் பல்வேறு நிலைகளில் யவனர்கள் தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அந்த நினைவு கள் தமிழக வரலாற்றின் ஊடாக தனித்த மேகங்களாக மிதந்துகொண்டிருக்கின்றன.

யவனர் காலம் முதலே புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்த நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் பயணம்செய்த கிரேக்கப் பயணிகள் தென்னிந்தியத் துறைமுகங்கள் பற்றி சிறுகுறிப்புகளை எழுதியிருக்கின்றனர். அவற்றில், 'பெரிபிளஸ் ஆஃப் எரித்ரயென்’ மிகவும் முக்கியமானது. இதில் சோழமண்டலக் கரையில் உள்ள துறைமுகங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

கிழக்குக் கடற்கரையில் வணிகச் சந்தை கூடும்போது டிமிரிகாவில் இருந்தும் வடக்கு துறைமுகங்களில் இருந்தும் வரும் கப்பல்கள் தங்குவதற்கு வசதியான இடங்களாக கருதப்படுவது காமரா. அதற்கடுத்தது பொதுகே மற்றும் சோபட்மா ஆகியவை. இவற்றில், டிமிரிகா எனக் குறிப்பிடப்படுவது தமிழகம், காமரா என்பது காவிரிப் பூம்பட்டினம், சோபட்மா என்பது மரக்காணம். பொதுகே என்பது அரிக்கமேடு என்று, வரலாற்று ஆய் வாளர்கள் கருதுகின்றனர். மிளகு ஏற்றிச்செல்ல வரும் கப்பல்கள் தங்குமிடமாக தமிழகத் துறைமுகங்களில் ஒன்றாக பொதுகே நிலவியது என்று ஆய்வாளர் தாலமி குறிப்பிடுகிறார்.

காவிரிப்பூம்பட்டினம் மற்றும் பொதுகே ஆகிய இரண்டையும் எம்போரியம் என்று அழைக்கின்றனர். அதாவது, பாய்மரக் கப்பல்கள் வந்து தங்கிச் செல்லும் துறைமுகம் என்பது அதன் பொருள்.  ரோம வணிகர்கள் தங்களின் பொருட்களை சேமித்துவைக்கும் இடத்தையும் எம்போரியம் என்றே அழைத்தனர். அப்படி, பொருளை சேமித்துவைத்து தங்களின் நாட்டில் இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப அவர்கள் வாணிகம்செய்த துறைமுகங்கள்தான் இவை இரண்டும் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. காவிரிப்பூம்பட்டினம் பற்றி நிறைய இலக்கியச் சான்றுகளை நாம் காண முடிகிறது. ஆனால், பொதுகே பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஒருவேளை, சோழர்களின் தலைநகராக 'புகார்’ இருந்தது காரணமாக இருந்திருக்கக்கூடும். பொதுகே வெறும் வணிக நகராக மட்டுமே இயங்கியது என்பதால், இலக்கிய முக்கியத்துவம் பெறாமலேயே போயிருக்கக்கூடும். பொதுகே இன்று அரிக்கமேடு என்று அழைக்கப்படுகிறது. ''ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள மேடு என்பதால் அரிக்கமேடு என்று அழைக்கப்பட்டிருக்கலாம்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.ஆர்.சீனிவாசன். செஞ்சி ஆற்றின் கிளை நதியான அரியாங்குப்பத்தாறு கடலில் கலக்கும் நீர்வழியில் அமைந்துள்ள மேடு என்றும் நிலர் பொருள் கூறுகின்றனர். கி.பி. 100 முதல் 220-ம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் புத்தர் வழிபாடு இருந்திருக்கிறது. ஆகவே, அரிங்கன்மேடு அதாவது புத்தன் மேடு என்பதே அரிக்கமேடு ஆகியது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், இவை இரண்டையும்விட இது சமணப்பெயரின் மிச்சமே என்கிறார் அரிக்கமேட்டை ஆராய்ச்சி செய்துள்ள தில்லை வனம்.

அரிக்கமேடு என்பது சமண சமயக்கடவுள் அருகனோடு தொடர்பு கொண்டது. சந்திரகுப்தர் காலத்தில் சமண வழிபாடு தென்னிந்தியாவில் பரவியிருந்தது. அதன்படி, பல்வேறு ஊர்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறுவப் பட்டன. அப்படி உருவான அருகன் வழிபாட்டுத் தலமே அரிக்கமேடு என்கிறார். இதற்கு ஆதாரமாக இந்தப் பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தில்லை வனம்.

ஆனால், பௌத்த சிற்பங்களும் மிச்சங்களும் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இது ஒரு பௌத்த ஸ்தலமாகவே இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. பண்டைய பொதுகே துறைமுகம் மிகப் பெரியதாக இருந்திருக்கக்கூடும். பண்டக சாலைகள், தொழிற் கூடங்கள் மற்றும் குடியிருப்பு கள் அடங்கிய பெரிய நகர மாகவே இருந்திருக்கலாம். ஆகவே, வீராம்பட்டினம், காக் காயந்தோப்பு, அருகன்மேடு, சின்னவீராம்பட்டினம் ஆகியவை ஒன்று சேர்ந்து பழைய பொதுகேயாக இருந் திருக்கக்கூடும். பொதுகே பகுதியில் சமண பௌத்தத் துறவிகளுக்கான தவப்பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடம் சாக்கியன் தோப்பு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதுவே மருவி இன்று காக்கயன்தோப்பு என்று அழைக்கப்படுகிறது. இது பௌத்த நினைவின் மிச்சம்.

1779-ம் ஆண்டு வரை அரிக்கமேட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை எவரும் உணர்ந்திருக்கவில்லை. இந்தப் பகுதியில் செங்கல் சூளைகள் அதிகமாக இருந்திருக்கின்றன. அப்படி ஒரு செங்கல் சூளைக் காகத் தோண்டப்பட்ட குழிக்குள் சீனக் களிமண் ஜாடிகள் கண் டெடுக்கப்பட்டன. அதன் பிறகே இங்கு அகழ்வாய்வுப் பணி செய்யப்பட்டது.

அரிக்கமேட்டின் பெருமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் லெழாந்துய் என்ற பிரெஞ்சுக்காரர். வானவியல் ஆய்வுக்காக புதுச்சேரியில் தங்கியிருந்த இவர், வரலாற்றுச் செய்திகளில் ஆர்வம்கொண்டு இந்தப் பகுதியை ஆராய்ந்தார். இவர் சேகரித்த தகவல்களைக்கொண்டு இவர் எழுதிய நூலில் அரிக்கமேட்டின் சிறப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, ஒரு நூற்றாண்டு காலம் யாரும் இந்தப் பகுதியில் எந்த ஆய்வும் நடத்தவில்லை. 1937-ல் புதுச்சேரி பிரெஞ்சுக் கல்லூரிப் பேராசிரியர் ழுவோ துய்ப்ராய், அரிக்கமேடு பகுதியில் காணப்பட்ட மண்பாண்டங்கள், மணிகள் ஆகியவற்றைச் சேகரித்து விரிவான ஓர் ஆய்வு நடத்தி, லெ செமோர் என்ற ஆய்வு இதழில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஆர்வம்கொண்டு வியட் நாமில் இருந்து கொலுபேவ் என்ற அறிஞர் அரிக்கமேட்டுக்கு வந்தார். அவர் பல்வேறு தொல்பொருள் ஆய்வுகளை நடத்தி, அதன் வரலாற்றுத் தொன்மையை ஆராய்ந்தார். 1940-ம் ஆண்டு சென்னை அருங்காட்சியகத் தலைவராக இருந்த ஐயப்பன், அரிக்க மேட்டில் ஆய்வு நடத்தி, தொல்பொருள் சின்னங்களை சேகரித்தார். அரிக்கமேடு என்பது தென்னிந்தியாவின் தட்சசீலம் போன்றது என்று, ஐயப்பன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிறகு, 1944-ல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனராக இருந்த மார்ட்டிமர் வீலர் அரிக்கமேட்டைப் பற்றி கேள்விப்பட்டு, புதுவைக்கு வந்தார். இங்கு கிடைத்த சான்றுகளை ஆராய்ந்து, இதை விரிவாக ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் அரிக்கமேட்டில் தீவிர அகழ்வாய்வு செய்யப்பட்டடன. அந்த ஆய்வில் கிடைத்த மட்கலங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டன.

கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், அரிக்கமேடு பானை எழுத்துகள் பற்றி எழுதிய கட்டுரை, உலகின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அரிக்கமேடு ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கின.

1941 முதல் 1992 வரை அரிக்க மேட்டில் செய்த பல்வேறு அகழ் வாய்வுகளில் மட்கலன்கள், மணி வகைகள், அணிகலன்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள், உறைகிணறுகள், சாயத்தொட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமலா பெக்லி தலைமை யில் நடந்த ஆய்வில் சங்கு வளையல்கள், காதணிகள், வண்ணம் தீட்டப் பயன்படும் குச்சிகள், மரச்சீப்பு, சுடுமண் விலங்கு பொம்மைகள், நீலக் கண்ணாடிக் கோப்பைத் துண்டுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஆம்போரா சாடி போன்றவை கிடைத்துள்ளன. பண்டைய காலங்களில் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் மது, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேமித்துவைக்க ஆம்போரா ஜாடிகளைப் பயன்படுத்துவர். இந்த ஜாடிகளை ரோமானியர்கள் தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். இது, மென்மையான களிமண்ணால் வனையப்பட்டு, பழுப்பு நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

ஆம்போரா ஜாடியின் அடிப்பகுதி கூர்மையாகவும், கழுத்துப் பகுதியில் இருபுறமும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இதை எடுத்துச் செல்வது எளிது. இந்த ஜாடிகள் கி.மு. 100-ல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதுபோலவே, மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்டு வந்த ரௌலெட்டே எனும் மட்கலன்கள் விசேஷமானவை. இந்தக் களிமண் இந்தியாவில் கிடைக்காது. உருக்கு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த மட்கலன்கள் ரோமானியர்களால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அழகுமிக்க இந்த மட்கலன்கள் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்திருக்கின்றன. களிமண் கூஜா ஒன்றும் அரிக்கமேட்டு ஆய்வில் கிடைத்துள்ளது. இது, ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுவது. குளிர்ந்த நீரை சேமித்துவைத்துக் குடிக்கப் பயன்படுத்தப்படும் இந்தக் கூஜா, கடற்பயணத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரிக்கமேடு அகழ்வாய்வுகள் வெளிப்படுத்திய கட்டடப் பகுதிகளுக்குள் முக்கியமானது, அதன் பண்டக சாலை. செவ்வக வடிவம்கொண்ட இந்தப் பண்டகசலை, பெரிய செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பண்டக சாலை ஆற்றங்கரையை நோக்கி இருக்கும்படி கட்டப்பட்டு இருக்கிறது. அதுபோலவே, துணிகளுக்கு சாயமிடும் சாயப் பட்டறைகளும், தொட்டிகளும் அரிக்கமேட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் இருந்து கழிவு நீர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக சிறு வாய்க்கால்கள் தனியே அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமானப் பணிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மறுபக்கம் போலவே இருக்கிறது. சங்குக் கண்ணாடி ரத்தினக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவை அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. இதைக் கருத்தில்கொள்ளும்போது, அங்கே மணி உருவாக்கும் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முற்றுப்பெறாத சங்கு வளையல்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன. சிறிய சங்குகளை அறுத்து காதணிகள் செய்திருக்கின்றனர்.  தாமிரத்தால் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, குழவிக்கற்கள், முதுமக்கள் தாழி, மரச்சுத்தி எனப் பல்வேறு அரிய பொருட்கள் அரிக்கமேடு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வணிகம் காரணமாக ரோமானியர்கள் தமிழகம் வந்திருந்தபோதும் அவர்களின் பண்பாடும் கலைகளும் தமிழகத்தில் ஊடுருவி, பண்பாட்டுக் கலப்பு ஏற்பட்டுள்ளது.  

ரோமானியர்கள் இந்தியாவுக்குக் கடலில் பயணம்செய்து வருவதற்கு பருவக்காற்றே முக்கிய துணையாக அமைந்திருந்தது. இந்தப் பயணங்கள் வடமேற்குப் பருவக் காற்று சாதகமாக வீசும் பருவகாலத்தில் நடந்திருக்கிறது. எகிப்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்படும் பயணம் ஜூலையிலும், இந்தியாவில் இருந்து எகிப்து செல்லும் பயணம் கோடையிலும் தொடங்கி இருக்கிறது. ஒரு பயண காலம் என்பது மூன்று மாதங்கள். ரோமானியர்கள் எகிப்திய துறைமுகத்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு செங்கடலின் கீழ்முகமாகப் பயணம் செய்து அரேபியத் துறைமுகமான மூசாவைக் கடந்து பாபல் ஜலசந்தி வழியாக அரேபியாவின் தெற்குத் துறைமுகமான கானேவில் தங்கி, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர்.  

அவர்களில் ஒரு பிரிவினர் அரபிக் கடலில் பயணம்செய்து குஜராத்தை அடைந்திருக்கின் றனர். மற்ற குழுவினர் மலபார் பகுதியை அடைந்து அங்கிருந்து கடல் வழியாக அரிக்கமேட் டுக்கு வந்திருக்கின்றனர். முசிறி மற்றும் அரிக்கமேடு துறைமுகங்கள், கப்பல்கள் வந்து தங்கும் தளமாக மட்டுமின்றி சரக்குகளை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு மாற்றி சிறிய துறைமுகங்களுக்கு செல்வதற்கு உதவி செய்வதற்கும் வசதியுள்ள இடமாக இருந்தன. அரிக்கமேட்டின் வட பகுதியில் தனியான படகுத்துறை ஒன்று இருந்தது. அரிக்கமேட்டை அடைந்த ரோமானியப் பொருட்கள் அங்கிருந்து வடக்கே வசவசமுத்திரம் தெற்கே அழகன் குளம் ஆகிய பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. பிறகு, அழகன் குளத்திலிருந்து வைகை ஆற்று வழியாக மதுரைக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பல்வேறு பொருட்கள் ரோமானியர்களால் இறக்குமதி செய்யப்பட்டது போலவே தந்தம், மிளகு, தேக்கு, அகில், வாசனைத் திரவியங்கள், பட்டு, முத்து ஆகிய பொருட்கள் தமிழகத்தில் இருந்து ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இந்த வணிக முயற்சிகளுக்கு ரோமானியப் பேரரசு, தமிழக மன்னர்களுடன் முறையான வணிக ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. வெளிநாட்டு வணிகர்களிடம் சுங்க வரி வசூலிக்கும் பழக்கம் அரிக்கமேட்டிலும் இருந்திருக்கிறது, இந்த வரிப் பணத்தைக்கொண்டு துறைமுகக் கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பழந் தமிழர் வாழ்வியலுக்கு சான்றாகத் திகழும் அரிக்கமேடு, மிக முக்கியமான வரலாற்றுப் பெட்டகம். அங்கே இன்னமும் முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதுவரை நடந்த முக்கிய ஆய்வுகள்கூட அயல்நாட்டினர் செய் தவைதான்.

சிந்துச் சமவெளி ஆய்வை மட்டுமே பிரதானமாகக் கவனம்கொள்ளாமல் இதுபோன்ற தொன்மையான இடங்களையும் இந்தியத் தொல்பொருள் துறை விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி ஆய்வுசெய்தால், அறியப்படாத உண்மைகள் உலகின் வெளிச்சத்துக்கு வரும்.

Arikamedu is an archaeological site in Kakkayanthope, Ariyankuppam Commune, Puducherry. It is located at a distance 7 km from its capital Pondicherry, in the Indian territory of Puducherry, where Mortimer Wheeler conducted his best-known excavation in the 1940s. Arikamedu - 'Arikan-medu or Poduke’ which literally means, ‘eroding mound’.roman lamps, glassware and gemm also been found at the site According to Wheeler, Arikamedu was a Tamil fishing village which was formerly a major Chola port dedicated to bead making and trading with Romantraders. Various Roman artifacts, such as a large number of amphorae bearing the mark of Roman potter schools VIBII, CAMURI and ITTA, have been found at the site, supporting the view on an ancient trade between Rome and the ancient Tamil country of present day south India. Now Arikamedu is a part of Ariyankuppam Commune. Arikamedu was an important bead making centre.

Arikamedu is known to have been inhabited from pre first century times and was more or less continually occupied until modern times



























Saturday, January 4, 2014

வடமங்கலம் & கருமாங்கழனி: 3,000 year old turtle-shaped tomb found in Kancheepuram


காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமகா வித்யாலயா பல்கலைக்கழகம் உள்ளது.

இதன் தொல்லியல் துறை சார்பில் துறைத்தலைவர் ராமகிருஷ்ண பிசபதி தலைமையில் குழுவினர் கடந்த 10 நாளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம், கருமாங்கழனி ஏரி அருகில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு 2000 ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய பழங்கால மனிதர்களின் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து துறைத்தலைவர் ராமகிருஷ்ண பிசபதி கூறுகையில், ‘பல்கலைக்கழக மாணவர்களுடன் தொல்லியல் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வடமங்கலம், கருமாங்கழனி ஏரி அருகில் நிலத்தை தோண்டி ஆராய்ச்சி செய்தோம். அப்போது, 2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு ஆயுதம் தயாரிக்கும் பட்டறை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தயாரிக்கும் உபகரணங்களும் கிடைத்துள்ளன. கற்கால மனிதர்களின் மண்ணால் செய்யப்பட்ட குடுவை ஓடுகளும் கிடைத்துள்ளன.

இவற்றை காஞ்சிபுரத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு சென்று துள்ளியமாக ஆராய்ச்சி செய்ய உள்ளோம்’ என்றார்.

The excavation of a tomb in Vadamangalam village in Kancheepuram district has demonstrated yet again that the entire district is a treasure trove of megalithic burial sites, which reflect the culture of an era buried in the annals of time.

About 3,000 years ago, when man discovered iron and its use as a tool and a weapon, the metal revolutionised life and society. That period is better known as Iron Age.

In Tamil Nadu, Iron Age also marked a practice of burying the dead and placing boulders in the form of a circle or constructing dolmens with slabs on the surface. They were meant to be memorials for the beloved relatives who passed away. Such places are called megalithic sites.

Kancheepuram district has the maximum number of megalithic sites in Tamil Nadu, followed by Pudukottai. In Kanchi district alone, there are about 150 megalithic burial sites out of which 103 are identified, notified and protected by the Archaeological Survey of India (ASI).

However, no habitation sites have be properly identified or found in Kanchi district till date. Kundrathur is believed to be a habitation site where people flourished 2,500-3,000 years ago, but a proper identification has not yet been done.

Among the areas identified as megalithic sites in Kanchi district are Tiruporur, Siruthavur, Thanur and Amirthamangalam near Maduranthakam, Pallavaram, Vadamangalam, Venbakkam and Sembakkam.

Though other districts too have megalithic sites, they are not as rich as Kancheepuram. Pudukottai district has about 70 such sites, including the famed Adichanallur in Tuticorin district where excavations started in the 19th century. Kodumanal near Erode is among the other notable megalithic burial places in Tamil Nadu.

http://tamilheritagefoundation.blogspot.in/2012/03/3000-year-old-turtle-shaped-tomb-found.html

http://www.deccanchronicle.com/130331/news-current-affairs/article/village-dates-back-iron-age

http://www.newindianexpress.com/states/tamil_nadu/article343755.ece

http://www.newindianexpress.com/states/tamil_nadu/article343753.ece








செங்கலூர் (SENGALUR: Ancient megalithic wares excavated near Pudukottai)


Hundreds of glass beads, beads made of semi-precious stones and terracotta, fragmented bangles, pot herds with graffiti marks are some of the rare excavations made at Sengalur village in Kulathur taluk in Pudukottai district. A rare gold foil, a couple of topaz stones and nine carnelian stones are some of the important excavations at the site.

The ASI took up the excavation at the village about two months ago and excavated the rare megalithic wares of Iron Age period dating back to 2,300 to 2,500 years ago.

Addressing the media persons at the site, D. Dayalan, Superintending Archaeologist, Temple Survey Project, Southern Region, ASI, said that Sengalur was one of the major sites with hundreds of megalithic edifices of different varieties on an extent of about 20 hectares. Both burial sites and habitation sites are located in the village and obviously, the ASI took up the excavation at both the places.

Megalithic wares at burial sites

A large number of pottery wares in red and black; ring stand with pots; terracotta wares; toy objects; bowls, lids and decorative pieces made of clay have been excavated.

The special feature of the village is that it accounts for a variety of Iron Age sepulchral monuments which could be broadly classified as stone circles with or without cairn packing; stone circle with cist burial of different types; cist burial with an extension in the front; urn burials; urn burials with capstone; menhir; rectangular shaped structure.

The burial sites testify to both the engineering skill of the people of the hoary past and their glory and honour to the dead. The sites have been well designed. It is bordered by an array of locally available laterite blocks of uniform size and shape. The presence of granite slab stones at the megalithic monuments indicates to the availability of the granite at a nearby village. At the bottom of the granite boulder, the ancient people had carved out a semi-circular shaped passage through which the objects used by the dead had been kept. “At least 300 burials have been found in this place, a rare feature in the entire South India,” says Dr. Dayalan.

On the objectives of the excavation, he said that the sepulchral monuments formed the foundation of all architectural edifices and hence a study of these earlier monuments would provide ample evidence to analyse the early architectural style, the mode of their execution, human resource management, equipment used so on and so forth. Among the megalithic burial sites, the rectangular structure was found only in Sengalur and Sittannavasal villages in Pudukottai district.

Excavation at habitation site

The study on habitation sites of Melapatti and Nathakadu villages in the vicinity has resulted in the excavation of many terracotta figurines, scores of glass beads, beads made of semi precious stone and terracotta, fragmented bangles, potsherds with graffiti markings.

The availability of a glass tube testified to the fact that the ancient people were good at making the glass beads and bangles. Another habitation site testified to the extraction of iron from the iron ore.

The Assistant Archaeologist, A. Anilkumar, said that steps were being taken to create awareness among the masses, especially school students on the importance of the megalithic wares. The excavated sites had been re-filled with earth, after documentation and digital photographing.

The village is 36 km from Tiruchi.

http://www.ifpindia.org/histatlas/Atlas_Files/pudukottai.html

http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/ancient-megalithic-wares-excavated-near-pudukottai/article566336.ece

http://www.newindianexpress.com/states/tamil_nadu/article203623.ece















கொற்கை: 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு! (Korkai Excavation)


தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம் உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுபோல, இறக்குமதியும் நடந்தது. காலப்போக்கில், கொற்கை துறைமுகம் அழிந்து போனது. இந்நிலையில், பெங்களூரில் மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அறவாழி, சில நாட்களுக்கு முன், சொந்த மாவட்டமான தூத்துக்குடி வந்தார். அவர், கொற்கையில், பொக்லைன் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அங்கு, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.

கொற்கை சங்க காலம் தொட்டே ஒரு துறைமுக பட்டினமாய் இருந்து வந்தது. இதன் பழமையை அறிய தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1968, 1969களில் இவ்விடத்தில் 12 அகழாய்வு குழிகள் இடப்பட்டன. அதன் படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. அதனால் இவ்வகழாய்வுகள் தமிழ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பாணையோடு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது. அதனால் இதன் ஆய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சியின் ஒரு திருப்புமுனையாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அறவாழி கூறியதாவது: இந்த குளத்தின் மேற்பரப்பில் களிமண்ணும், அதனடியில் சாதாரண மண்ணும், அதற்கடியில் கடற்கரை மண்ணும் உள்ளன. இதன்மூலம், இங்கிருந்த கடற்பரப்பில் முன்னோர்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது. காலப்போக்கில் அதற்கு மேல் மண், களிமண் படிந்தது. நடு அடுக்கிலுள்ள சாதாரண மண்ணில், இறந்த முன்னோர்களின் உடலை மண் பானைகளில் போட்டு புதைத்த, முதுமக்கள் தாழிகள் உள்ளன. சராசரியாக, நான்கு அடி உயரத்தில், 25க்கும் மேற்பட்ட தாழிகள், சிதிலமடைந்த நிலையில், இங்கு காணப்படுகின்றன. அதிலுள்ள மனித உடல்களின் எலும்புத் துண்டுகளை வைத்து பார்க்கும்போது, இவை, 2,500 முதல் 3,000 ஆண்டிற்கு முந்தையது என கணிக்கப்படுகிறது. எனினும், தொல்லியல் துறை நிபுணர்கள் மூலம், இங்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டால், இங்கிருந்த முன்னோர்களின் வாழ்க்கை முறை, முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு அரிய பொருட்கள், தகவல்கள் துல்லியமாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மிகப் பழமையான கண்ணகி கோவில் இங்குள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் முன்னோர்களின் முதுமக்கள் தாழிகள், தொல்லியல் துறை மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, கொற்கையிலும் முதுமக்கள் தாழிகளை முழுமையாக கண்டறிந்து, வேலியிட்டு பாதுகாத்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென, வரலாற்று ஆய்வாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மணல் கொள்ளைக்காகவும், புதையல் இருப்பதாக கிளப்பி விடப்பட்ட வதந்தி காரணமாகவும், இக்குளம் பொக்லைன் இயந்திரம் மூலம் தொடர்ந்து தோண்டப்பட்டு, மணல் எடுக்கப்படுகிறது.

மொத்தம் தோண்டப்பட்ட 12 குழிகளில் சில முக்கியக்குழிகள்

இரண்டாம் குழி

1.62மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. தமிழகத்தின் தொன்மையான இதே தாழி அடக்கமுறை ஆதிச்சநல்லூரிலும் காணப்படுகிறது.

மூன்றாவது குழி

செவ்வக வடிவ கட்டிடப்பகுதி.

நான்காம் குழி

செங்கற்சுவர் பகுதி. இதன் செங்கற்கள் 14*29*7.5 செ.மீ. அளவினைக் கொண்டிருந்தன. மேலும் இக்கட்டிடத்தின் கீழ் கிணற்றின் உறைகளும் அதன் தெற்கில் கழிவு நீர் கால்வய்க்கான சுவடுகளும் உள. மேலுமிக்குழியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சில கரித்துண்டுகளும் கிடைத்துளது.

ஐந்தாவது குழி

நான்கு சாடிகள், சில எலும்புத்துண்டுகள், மட்கலண்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.

மற்ற குழிகள்

சில சங்குகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் கொண்ட பாணையோடுகளும் உள்ளன.

நான்காவது குழியில் கிடைத்த கரித்துண்டின் காலம் பொ.மு. 785 என்று மதிக்கப்படுவதால் (சி 14) அக்காலம் முதலே இங்கு கடல் போக்குவரத்து நடந்தது பற்றி அறிய முடிகிறது.

இங்கு காணப்படும் நாகரிகத்தை காலத்தைக் கொண்டு இதை 3 வகையாக பிரிக்கைன்ற்னர்.

முதல் பண்பாடு - கி.மு. 800 - கி.பி. 400
இரண்டாம் பண்பாடு - கி.பி. 401 - கி.பி. 1000
மூன்றாம் பண்பாடு - கி.பி.1001 - கி.பி.1400

அதன்படி முதற்பண்பாடே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

Korkai is a small village in Srivaikuntam Taluk of Tuticorin district. It is situated at a distance of 3 km to the north of the river Tamaraparani. The sea originally had receded about 6 km to the east. The river Tamaraparani skirted this town in ancient days. The site is referred to in Tamil Sangam literature, and has attracted the notices of the classical geographers as an important port of pearl fishery.

In the excavation a structure with nine courses of bricks in six rows was unearthed at the depth of 75 cm from surface level. Below the structure three large sized rings placed one over the other (probably  soakage  jars) were found. Inscribed potsherds bearing Tamil Brahmi letters assignable, to 300 BCE to 200 CE were also found. Charcoal samples were collected which were assigned to 785 BCE, by the Tata Institute of Fundamental Research, Mumbai.





காணொளி: தொல்பொருள் பாதுகாவலர் ஆதிச்சநல்லூர் சிதம்பரம் (Video: Archaeological Guard Adichanallur Chidambaram)

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி''.

இளங்கோவடிகள்-சிலப்பதிகாரம்


சிதம்பரம்
தொல்பொருள் பாதுகாவலர்
ஆதிச்ச நல்லூர்
Archaeological Guard




செம்பியன் கண்டியூரில் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு (Indus Script celt found in Tamil Nadu)


சிந்துசமவெளி நாகரிக எழுத்துக்களுடன் கூடிய ஒரு புதிய கற்கால ஆயுதம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வி.ஷண்முகநாதன் என்ற பள்ளி ஆசிரியர் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வாழைக்கன்று நடுவதற்கு குழி தோண்டியபோது இரண்டு கற்களாலான ஆயுதங்களைக்கண்டெடுத்தார். இந்த ஆயுதங்கள் கி.மு.1500 ஆம் ஆண்டைச்சேர்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தஞ்சாவூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆயுதத்தின்மீது உள்ள நான்கு குறியீடுகள் உள்ளன. இக்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக்காலத்தைச்சேர்ந்த தாழிகள், கருப்பு சிவப்பு மட்கலங்கள், குறியீடு பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள் மற்றும் எலும்புத்துண்டுகள், சாம்பல் நிற மட்கலங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வூரிலிருந்து கிழக்கே 5 கி.மீ.தொலைவில் உள்ள வாணாதிராஜபுரம், வடக்கே 2 கி.மீ. தொலைவிலுள்ள முருகமங்கலம் ஆகிய ஊர்களிலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கிடைத்துள்ள கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முதற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனிதவடிவுடையதாகவும்(ஹரப்பா எழுத்துக்களின் அகர பட்டியலில் எண்.48), அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும்(எண்.342), மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச்சூலம் போன்ற அமைதியிலும்(எண்.368), நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறைவடிவின் நடுவில் ஒரு வளையத்தினை இணைத்தது போலவும்(எண்.301) உள்ளது. எழுத்துக்களில் முதலிரண்டும், கூரிய கருவியால் தொடர்ந்த புள்ளியிட்டும், அடுத்தவை கீறலாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடமிருந்து வலமாகவே பொறிக்கப்பட்டவை என்பதை இடப்புறமிருந்து வலப்புறமாக அழுத்தம் குறைவதிலிருந்தும், அளவில் பெரியதாகத் தொடங்கி வரவரச் சிறியதாக எழுதியிருப்பதில் இருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.

"இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு இது" என்று உலகப்புகழ்பெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிபுணர் திரு. ஐராவதம் மகாதேவன் இந்த இரண்டு கற்களைப்பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். இந்து சமவெளிநாகரிக எழுத்துக்கள் தமிழ்நாட்டையும் எட்டியிருந்தன என்பதுதான் நமக்குக்கிடைக்கும் புதிய செய்தி. "நான் மிக கவனமாக இந்த இரண்டு கற்களையும் ஆராய்ந்தேன். கி.மு. 1500க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்ததாக இந்த கற்கள் இருக்கவேண்டும்" என்கிறார் திரு ஐராவதம் மகாதேவன். வட இந்தியாவில் இருந்து இந்த கற்கள் வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றும் திரு ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

கற்களினாலான இரண்டு ஆயுதங்களில் ஒன்றில் மட்டும் எழுத்துக்குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு குறியீடுகளில் முதலாவது குறியீட்டில் விலாஎலும்புகளுடன்கூடிய உடலமைப்பு காணப்படுகிறது. இரண்டாவது குறியீட்டில் ஒரு ஜாடி காணப்படுகிறது. இதைப்போன்ற நூற்றுக்கணக்கான அடையாளங்கள் ஹாரப்பாவில் காணப்படுகின்றன. திரு ஐராவதம் மகாதேவன் முதல் குறியீட்டை 'முருகு' எனவும் இரண்டாவது குறியீட்டை 'அன்' என்றும் இரண்டு குறியீடுகளும் சேர்ந்து 'முருகன்' என்ற சொல்லை உணர்த்துவதாக கூறுகிறார். பழந்தமிழ் செய்யுள்களில் முருகக்கடவுள் வேட்டையாடுபவராகவும், போர்க்கள கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாவது குறியீடு சூலமாகவும் நான்காவது குறியீடு பிறையாகவும் காணப்படுகிறது.

சிறப்புகள்:

புதிய கற்காலக் கோடரி, சிந்து சமவெளி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை.

புதிய கற்காலப் பண்பாட்டுத்தமிழ் மக்களுக்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையேயான தொடர்பினை வலியுறுத்தும் கண்டுபிடிப்பு.

சிந்துவெளிப்பண்பாட்டு நாகரிகக் கூறுகள் கோதாவரி ஆற்றுக்கும் தெற்கே பரவி இருந்ததற்கான உறுதியான சான்று.

தமிழகத்தில் சிந்துவெளிப்பண்பாட்டுப் பரவலுக்கான நேரடிச்சான்று

ஹரப்பன் எழுத்துக்களின் காலக்கணக்கீட்டுக்கு உதவும் நேரடிச்சான்று

தக்காணத்தில் நிலை பெற்றிருந்த் ஹரப்பா பண்பாட்டினரோடு தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புக்கான சான்று.

தமிழரின் எழுத்துத்தொன்மையினை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த சான்று.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும்வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம். தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானபூர்வமான சான்றுகள் ஆகும்.தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்துப் பெருமை கொள்வோம்.

Discovery of a Century

The discovery of a Neolithic stone celt, a hand-held axe, with the Indus script on it at Sembian-Kandiyur in Tamil Nadu is, according to Iravatham Mahadevan, "a major discovery because for the first time a text in the Indus script has been found in the State on a datable artefact, which is a polished neolithic celt." He added: "This confirms that the Neolithic people of Tamil Nadu shared the same language family of the Harappan group, which can only be Dravidian. The discovery provides the first evidence that the Neolithic people of the Tamil country spoke a Dravidian language." Mr. Mahadevan, an eminent expert on the subject, estimated the date of the artefact with the Indus script between 2000 B.C. and 1500 B.C.

It was in February 2006, when V. Shanmuganathan, a school teacher living in Sembian-Kandiyur, near Mayiladuthurai in Nagapattinam district, dug a pit in the backyard of his house to plant banana and coconut saplings, that he encountered two stone celts. The teacher, who is interested in archaeology, rang up his friend G. Muthusamy, Curator of the Danish Fort Museum at Tranquebar, which belongs to the Tamil Nadu Department of Archaeology. Mr. Muthusamy, who also belongs to the same village, took charge of the two celts from his friend and handed them over to T.S. Sridhar, Special Commissioner, State Department of Archaeology.

When Mr. Sridhar examined one of the two stones, he found some engravings on it. So he asked the epigraphists of his Department to study the particular celt. To their absolute delight, they found fours signs on it - and all four of them corresponded with the characters in the Indus script. When the celt with the Indus script was shown to Mr. Mahadevan, he confirmed that they were in the Indus script. The celt with the script measures 6.5 cm by 2.5 cm by 3.6 cm by 4 cm. It weighs 125 grams. The other celt has no engravings on it.

Mr. Mahadevan, one of the world's foremost scholars on the Indus and the Tamil-Brahmi scripts, is the author of the seminal work, The Indus Script: Texts, Concordance and Tables. It was published by the Archaeological Survey of India, New Delhi in 1977.

First Indus sign

The first Indus sign on the celt showed a skeletal body with ribs, seated on his haunches, body bent, lower limbs folded and knees drawn up. The second sign shows a jar with a handle. The first sign stood for "muruku" and the second for "an." Together, they read as "Murukan." They formed a very frequent combination on the Indus seals and sealings, especially from Harappa. The first "muruku" sign corresponded with the sign number 48, the second with the number 342, the third, which looks like a trident, corresponded with the sign number 367, and the fourth with 301.

These numbers are found in the sign list published by Mr. Mahadevan.

He said: "`Muruku' and 'an' are shown hundreds of times in the Indus script found at Harappa. This is the importance of the find at Sembiyan-Kandiyur. Not only do the Neolithic people of Tamil Nadu and the Harappans share the same script but the same language." In Tamil Nadu, the muruku symbol was first identified from a pottery graffiti at Sanur, near Tindivanam. B.B. Lal, former Director-General of ASI, correctly identified this symbol with sign 47 of the Indus script. In recent years, the muruku symbol turned up among the pottery graffiti found at Mangudi, near Tirunelveli in Tamil Nadu, and at Muciri, Kerala. But this was the first time that a complete, classical Indus script had been found on a polished Neolithic stone celt, Mr. Mahadevan pointed out. He emphasised that the importance of the discovery was independent of the tentative decipherment of the two signs proposed by him.