Thursday, January 30, 2014

திருவக்கரை (Thiruvakkarai): 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரங்கள் (20 Million Years Old Fossilised Tree)


திருவக்கரை தொல்பழங்கால, வரலாற்றுக்கால ஊராகும். திருவக்கரை இயற்கைச் சிறப்பு மற்றும் பண்பாட்டுச்சிறப்பு பெற்ற ஊராகும்.

அமைவிடம்

இவ்வூர் திண்டிவனத்திலிருந்து மைலம் வழியாகச் செல்லும் பாண்டிச்சேரி சாலையில் சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது.

கல்மரங்கள்

இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் கல்லாகி படிவங்களாகக் (fossils) காணப்படுகின்றன.

இங்கு ஒரு கல்மரப் பூங்கா உள்ளது. இது போன்ற கல் மரங்கள் கிடைக்கும் இடங்கள் தமிழகத்தில் வெகு சிலவே உள்ளன.

தொல்பழங்காலச் சான்றுகள்

இங்கு பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கல் மரங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. இவற்றில் சுரண்டிகள். செதில் கருவிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இந்தக் கல் மரத்துண்டுகளும், குவார்ட்சால் ஆன கூழாங்கற்களும் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளன

பெருங்கற்காலச் சான்றுகள்

இங்கு பெருங்கற்காலத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்புப் பானைகள் காணப்படுகின்றன. மேலும் கருங்கற்களாலான கருவிகளும் கிடைக்கின்றன. இவைகளும் கல் மரங்களும் அருகிலேயே காணப்படுகின்றன.

கோவில்

இங்கு வரலாற்றுச்சிறப்பு மிக்க சிவன் கோவில் உள்ளது. இதன்பெயர் சந்திர மௌலீஸ்வரர் என்பதாகும். இக்கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த முதலாம் இராசராசன் மற்றும் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ அரசன் கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி, இங்கு திருப்பணி செய்துள்ளார். இக்கோவிலில் தேவரடியார்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/tiruvakara.htm

A repository of spectacularly preserved fossilised trees

The National Fossil Wood Park in Thiruvakkarai, located about 35 km from Puducherry on the road to Tindivanam in Villupuram district, maintained by the Geological Survey of India (GSI) is a repository of spectacularly preserved fossilised trees that are at least 20 million years old. They belong to what is called the ‘Mio-Pilocene' age and give a glimpse of the composition of flora that existed in the pre-historic ages.

R. Pitchai Muthu, Director of the GSI, Tamil Nadu believes that the fossil woods was the result of a huge flood that occurred millions of years ago. The flood waters destroyed large parts of forests in the adjoining area. The trees were then transported to the present site of deposition in inland seas. This can be confirmed from the fact that “branches and roots are absent in these horizontally disposed trees,” he says.

They then underwent the ‘petrification' process “during which the woody matter was replaced by silica and the water was expelled due to compaction of the superposed elements.”

The silica that has preserved these tress are said to be derived from volcanic ash ejected during explosions. But even today, the annular rings and pit structures of the tress are brilliantly preserved and are visible even to the naked eye. All these provide vital evidences in determining the age of such fossils. Infact, Mr. Muthu says that the degree of perfection in the petrification process in Thiruvakkarai is a rarity. Very few fossil forests in the world can boast of such high levels of preservation.

The park has around 200 fossil trees ranging from 3 to 15 metres in length and 5 metres in girth. According to local legends, the trees are the bones of a demon that was slain by Lord Vishnu. They also find mention during festivals at the famous Kali temple in the village. The number of tourists visiting this park has been minimum largely due to its location. The approach roads leading to the park are in a deteriorated state and travelling in cars and buses could be a difficult task. In order to improve such infrastructure, the GSI has proposed a Rs. 56 lakh project to construct a mini museum and approach steps to the park. Once completed, Mr. Muthu says it would help promote Thiruvakkarai as a major tourist spot in the State.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-repository-of-spectacularly-preserved-fossilised-trees/article794856.ece





Wednesday, January 29, 2014

கிருட்டிணகிரி பாறை ஓவியத்தில் கழுதை உருவம்!: (2500-3000) ஆண்டுகளுக்கு முற்பட்டது (Rock paintings of Iron Age period found near Krishnagiri)


கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் முதன்முறையாக கழுதை உருவத்தை வரவாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிருட்டிணகிரியில் பெண்ணை யாறு தொல்லியல் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் தமிழகம் முழுக்கச் சென்று பல்வேறு வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வரலாற்றுச் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடித்து, பதிவு செய்து வருகின்றனர். மேலும், வரலாற்றுச் சான்றுகளை அழிவிலிருந்து காக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் பதிவு

சில மாதங்களுக்கு முன் இவர்களது ஆய்வில், கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் குரங்கு உருவம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பாறை ஓவியங்களில் குரங்கு உருவம் இருப்பது அரிதானது. இந்த நிலையில், தற்போது பாறை ஓவியத்தில் கழுதை உருவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் கழுதை உருவம் இருப்பதாக எந்தச் சான்றும் பதிவு செய்யப்படவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் கண்டறியப்பட்ட பழைமை வாய்ந்த கழுதை உருவ பாறை ஓவியம் கிருஷ்ணகிரியில் தற்போது கண்டறியப்பட்டதேயாகும்.
இந்த ஓவியம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கழுதையின் பயன்பாடு இருந்திருப்பது இந்த ஓவியத்தின் மூலம் உறுதியாகிறது.

மலைக் குன்று

இந்த ஓவியம், கிருட்டிணகிரி மாவட்டம், மேல்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள மலைக்குன்று ஒன்றில் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் சுகவன முருகன், சதாநந்தன் கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த ஓவியத்தைக் கண்டறிந்தவர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியது:
இதுவரை அறியப்பட்ட பழமையான பாறை ஓவியங்களில் குதிரை, எருது, பசு, மீன், மயில் என விலங்குகளும், பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதுதான் முதன்முறையாக கழுதை ஓவியம் கண்டறியப் பட்டுள்ளது. இதில், கழுதையின் மீது வீரன் ஒருவன் வாளை ஏந்தியபடி சவாரி செய்கிறான். இந்த தொகுப்பில் இரு கோலங்கள், ஒரு மனிதன், ஒரு விலங்கு, ஒரு கை உள்பட 7 ஓவியங்கள் உள்ளன.

சுண்ணாம்புக் கலவை

தமிழகத்தில் பல இடங்களிலும் இதுவரை ஏராளமான கை ஓவியங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த கை ஓவியம் சிறப்பான வகையில், ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் கை எனக் கருதும் அளவு சிறியதாக உள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்துமே வெண்சுண்ணம் எனப்படும் சுண்ணாம்புக் கலவையால் வரையப்பட்டுள்ளன. கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில், இந்த கழுதை ஓவியம் கண்டறியப்பட்டது ஒரு மைல்லாகும்.
தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் குன்று இருப்பதால், அடிவாரத்தில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன. குன்றின் உச்சியில் உள்ள சிறிய காளியம்மன் கோயில் அருகே இருப்பதால், இந்த பாறை ஓவியம் சிதைக்கப்படாமல் தப்பித்துவிட்டது. அந்த சிறு கோயிலை ஒட்டிய பாறைகளின் மீது அமைந்துள்ள பெரிய பாறை ஒன்றின் விதானப் பகுதியில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சிலர் இந்தப் பாறை மீது கிறுக்கி, சேதப்படுத்தியுள்ளனர். மேலும், எந்நேரமும் இந்த பாறைகள் உடைத்து நொறுக்கப்படலாம் என்ற சூழலும் நிலவுகிறது. அரசு சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற வரலாற்று ஆவணங்களைக் காக்க முடியும் என்றனர்.

A rock painting of the Iron Age period was found in a hillock near Krishnagiri. This is one of the 11 rare rock paintings found in the hillocks of the district and within a radius of six kilometres from the town.

Archaeologist

According to Sugavana Murugan, a government school teacher and also a freelance archaeologist, only three of the paintings have been studied and the rest are yet to be documented.

Tamil Pandit

The first rock painting was found near the Gothigundu rock in 1972 by late Ramanujam, a Tamil Pandit who worked in the Government Boys Higher Secondary School. Megalithic potteries were also found in large numbers in and around Pethalapalli hillocks.

Survey


The need of the hour is to survey rare ancient rock paintings in the three hillocks around Krishnagiri and safeguard them, said Mr. Sugavana Murugan.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rock-paintings-of-iron-age-period-found-near-krishnagiri/article3829926.ece



Saturday, January 18, 2014

எயிற்பட்டினம் (Eyirpattinam): ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்


me (aravind) rob (batman) searching for a new dive site around pondy sea ..we dive 15km away from the shore..acidently we found the wall at the depth of 32 m ..rob named for the wall is called "aravind"s wall" wall start from 32 m and end with 42 m depth and sure 2 1/2 km length and wall travel north to south..beautyful life hidding there....

http://www.youtube.com/watch?v=Ybkau-cNpxE

http://www.youtube.com/watch?v=LuR0awnJ9qM


கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.

மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர,பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!


=====



பத்துப்பாட்டு மூலமும், அடிநேர் உரையும் என்ற நூலில், சிறுபாணாற்றுப்படையில் எயிற்பட்டினம் பற்றி வரும் பகுதியை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். முதலில் பாடல் அடிகளும், பின்னர் உரையும் உள்ளன.



சிறுபாணாற்றுப்படை



அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்


தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்


கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்


நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்


150     கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர


பாடல் சான்ற நெய்தல் நெடு வழி


மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய      (மது 351,மலை 250)


பனி நீர் படுவின் பட்டினம் படரின்


ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன


155     வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்


கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள்


மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து


நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த


பழம்படு தேறல் பரதவர் மடுப்ப


160     கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்


தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி


அறல் குழல் பாணி தூங்கியவரொடு


வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்





அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,


(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும்,


முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,


நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,


கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற,                 150


(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,


(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும்மதிலின் பெயர்கொண்ட,


குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் -


உயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,


மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்         155


கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டிபெரிய தோளினையும்,


திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்,


(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட,


பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,


கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் அரசனாகிய     160


அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி,


தாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே,


உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்








பூம்புகார் (Poompuhar:- Site could date back 11,600 years ago)


பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.


பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.


வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”


பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.


''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.


இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.


கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.


இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.


இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.


இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.


இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.


இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.


சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.


மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

அந்த  ''அண்டர்வேர்ல்ட்” தொலைக்காட்சித் தொடரை தேன்மழையில் இங்கு காணலாம்-[விழிய இணைப்பு]

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.


சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்


1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.


2.  மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.


3.  சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.


4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)


5.  குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.


6.  கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.


7.  புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.


8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.


9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.


10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.


11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.


12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.


13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.


ஆய்வுகளின் நம்பகத் தன்மை:


1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.


2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.


3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.


4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.


5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,  ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.


6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.


7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.


ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.


2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு          வெளிப்பட்டது.


3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில   தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச்      செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.


4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.


5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர்             கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.


6.  தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில்             வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.


7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.


8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து      நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.


9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.


10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.


11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.


12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.


13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.


14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.


15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.


16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.


17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.


18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார்.  இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).


19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.


http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M&feature=player_embedded

http://www.grahamhancock.com/underworld/underworld1.php?p=4

http://www.youtube.com/watch?v=o7GWn5Hba9g

The place is called Poompuhar. It lies on southeast India’s Coromandel coast facing the Bay of Bengal between modern Tamil Nadu and Sri Lanka. Its immediate offshore area has been the subject of marine archaeological investigations by India’s National Institute of Oceanography since the 1980′s — and numerous non-controversial finds of man-made structures dated between the third century AD and the third century BC have been made in the “inter-tidal zone” close to shore at depths down to 6 feet (approximately 2 metres).

These finds of structures in shallow water (some so shallow that they are exposed at low tide) have been quite widely written-up in the archaeological literature. But for some reason other discoveries that the NIO has made in deeper water off Poompuhar have attracted no attention at all. Most notably these other discoveries include a second completely separate group of structures fully three miles from the Poompuhar shore in water that is more than 70 feet (23 metres) deep. The lack of interest is surprising because to anyone with even minimal knowledge of post-glacial sea-level rise their depth of submergence is – or should be – highly anomalous. Indeed according to Glenn Milne’s sea-level data the land on which these structures were built last stood above water at the end of the Ice Age more than 11,000 years ago.

Is it a coincidence that there are ancient Tamil flood myths that speak of a great kingdom that once existed in this area called Kumari Kandam that was swallowed up by the sea? Amazingly the myths put a date of 11,600 years ago on these events — the same timeframe given by Plato for the end of Atlantis in another ocean.

Like the cities in the Gulf of Cambay the underwater structures three miles offshore of Poompuhar were first identified by an instrument called sidescan sonar that profiles the seabed. One structure in particular was singled out for investigation and was explored by divers from India’s National Institute of Oceanography in 1991 and 1993. Although they were not at that time aware of the implications of its depth of submergence — i.e. that it is at least 11,500 years old — the 1991 study confirms that it is man-made and describes it as:

a horse-shoe-shaped object, its height being one to two metres. A few stone blocks were found in the one-metre wide arm. The distance between the two arms in 20 metres. Whether the object is a shrine or some other man-made structure now at 23 metres [70 feet] depth remains to be examined in the next field season.

The 1993 study refines the measurements:

The structure of U-shape was located at a water depth of 23 metres which is about 5 kilometres off shore. The total peripheral length of the object is 85 metres while the distance between the two arms is 13 metres and the maximum height is 2 metres Divers observed growth of thick marine organism on the structure, but in some sections a few courses of masonry were noted








Monday, January 13, 2014

கணிசப்பாக்கம் (Kanisapakkam): பண்ருட்டி அருகே 5000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது.
குடுவைகள்
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மீன்வளர்ப்புக்காக பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிலத்துக்குள் புதைந்திருந்த பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மக்கிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தாழிகளை ஆய்வு செய்த தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் முதுமக்கள் தாழிகள் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்கள் இதோ...
கணிசப்பாக்கத்தில் கிடைத்துள்ள தாழிகளின் மேல் விளிம்புகளுடன் கூடிய மேல்மூடிகள் உள்ளன. மேலும் தாழிக்குள் 3 அடுக்குகள் கொண்ட மண் தட்டுகளும், சிறு சிறு குடுவைகளும் இருப்பதாக தெரிகிறது. இந்த முதுமக்கள் தாழிகளை நம் முன்னோர்கள் ‘முசுமுசுங்கை சால்’ என்ற வழக்கு சொல்லில் அழைத்தனர்.
எலும்பு கூடுகள்
பழங்காலத்தில் முதுமையடைந்து படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களை பராமரிக்க முடியாமல் அப்போது வாழ்ந்து வந்த மக்கள், இது போன்று தாழிகளில் வைப்பார்கள். அதோடு அவர்கள் பயன்படுத்திய முக்கிய பொருட்கள் மற்றும் உணவினையும் தாழிக்குள் வைத்து மூடி புதைத்து விடுவது வழக்கம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இறந்தவர்களின் எலும்புகூடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கத்தி, ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்கள் மக்கி போய் கிடைத்துள்ளது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது
தாழிக்குள் இருக்கும் மனித எலும்பு கூடுகள் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்குள் மக்கி மண்ணாகி விடும். கணிசப்பாக்கத்தில் கிடைத்த தாழிகளில் எலும்புகூடுகள் உள்பட எந்த பொருளும் இல்லை. இதனால் அவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று கருதபடுகிறது.
பண்ருட்டி அருகே கணிசப்பாக்கத்தில் முதுமக்கள் தாழி கிடைத்ததன் மூலம் இங்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியிருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. இது தவிர தாழிகள் கிடைத்துள்ள இடத்தில் அடி மட்டத்தில் இருந்து 4 அடி வரை களிமண்ணும், அதன் கீழ் 15 அடி வரையில் ஆற்றுமணலும் உள்ளன. இதனால் முந்தைய காலத்தில் கணிசப்பாக்கத்தில் பெரிய ஆறு பாய்ந்தோடியிருக்கலாம், காலப்போக்கில் ஆற்றின் போக்கு மாறியிருக்கலாம் எனவும் தெரிகிறது.

அரிக்கமேடு (ARIKAMEDU)


வணிகம் செய்ய வந்த யவனர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அவர்களே இங்கு கலை வளர்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தனர். 'யவனர் போல முயற்சிகொள்’ என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளது முக்கியமானது. யவனர்களில் ஒரு பிரிவினர் கொங்கணக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தும் இருக்கின்றனர். வணிகர், படைவீரர், கலைஞர், தூதுவர், கொடையாளி, குறுநில மன்னர் எனப் பல்வேறு நிலைகளில் யவனர்கள் தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அந்த நினைவு கள் தமிழக வரலாற்றின் ஊடாக தனித்த மேகங்களாக மிதந்துகொண்டிருக்கின்றன.

யவனர் காலம் முதலே புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்த நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் பயணம்செய்த கிரேக்கப் பயணிகள் தென்னிந்தியத் துறைமுகங்கள் பற்றி சிறுகுறிப்புகளை எழுதியிருக்கின்றனர். அவற்றில், 'பெரிபிளஸ் ஆஃப் எரித்ரயென்’ மிகவும் முக்கியமானது. இதில் சோழமண்டலக் கரையில் உள்ள துறைமுகங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

கிழக்குக் கடற்கரையில் வணிகச் சந்தை கூடும்போது டிமிரிகாவில் இருந்தும் வடக்கு துறைமுகங்களில் இருந்தும் வரும் கப்பல்கள் தங்குவதற்கு வசதியான இடங்களாக கருதப்படுவது காமரா. அதற்கடுத்தது பொதுகே மற்றும் சோபட்மா ஆகியவை. இவற்றில், டிமிரிகா எனக் குறிப்பிடப்படுவது தமிழகம், காமரா என்பது காவிரிப் பூம்பட்டினம், சோபட்மா என்பது மரக்காணம். பொதுகே என்பது அரிக்கமேடு என்று, வரலாற்று ஆய் வாளர்கள் கருதுகின்றனர். மிளகு ஏற்றிச்செல்ல வரும் கப்பல்கள் தங்குமிடமாக தமிழகத் துறைமுகங்களில் ஒன்றாக பொதுகே நிலவியது என்று ஆய்வாளர் தாலமி குறிப்பிடுகிறார்.

காவிரிப்பூம்பட்டினம் மற்றும் பொதுகே ஆகிய இரண்டையும் எம்போரியம் என்று அழைக்கின்றனர். அதாவது, பாய்மரக் கப்பல்கள் வந்து தங்கிச் செல்லும் துறைமுகம் என்பது அதன் பொருள்.  ரோம வணிகர்கள் தங்களின் பொருட்களை சேமித்துவைக்கும் இடத்தையும் எம்போரியம் என்றே அழைத்தனர். அப்படி, பொருளை சேமித்துவைத்து தங்களின் நாட்டில் இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப அவர்கள் வாணிகம்செய்த துறைமுகங்கள்தான் இவை இரண்டும் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. காவிரிப்பூம்பட்டினம் பற்றி நிறைய இலக்கியச் சான்றுகளை நாம் காண முடிகிறது. ஆனால், பொதுகே பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஒருவேளை, சோழர்களின் தலைநகராக 'புகார்’ இருந்தது காரணமாக இருந்திருக்கக்கூடும். பொதுகே வெறும் வணிக நகராக மட்டுமே இயங்கியது என்பதால், இலக்கிய முக்கியத்துவம் பெறாமலேயே போயிருக்கக்கூடும். பொதுகே இன்று அரிக்கமேடு என்று அழைக்கப்படுகிறது. ''ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள மேடு என்பதால் அரிக்கமேடு என்று அழைக்கப்பட்டிருக்கலாம்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.ஆர்.சீனிவாசன். செஞ்சி ஆற்றின் கிளை நதியான அரியாங்குப்பத்தாறு கடலில் கலக்கும் நீர்வழியில் அமைந்துள்ள மேடு என்றும் நிலர் பொருள் கூறுகின்றனர். கி.பி. 100 முதல் 220-ம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் புத்தர் வழிபாடு இருந்திருக்கிறது. ஆகவே, அரிங்கன்மேடு அதாவது புத்தன் மேடு என்பதே அரிக்கமேடு ஆகியது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், இவை இரண்டையும்விட இது சமணப்பெயரின் மிச்சமே என்கிறார் அரிக்கமேட்டை ஆராய்ச்சி செய்துள்ள தில்லை வனம்.

அரிக்கமேடு என்பது சமண சமயக்கடவுள் அருகனோடு தொடர்பு கொண்டது. சந்திரகுப்தர் காலத்தில் சமண வழிபாடு தென்னிந்தியாவில் பரவியிருந்தது. அதன்படி, பல்வேறு ஊர்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறுவப் பட்டன. அப்படி உருவான அருகன் வழிபாட்டுத் தலமே அரிக்கமேடு என்கிறார். இதற்கு ஆதாரமாக இந்தப் பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தில்லை வனம்.

ஆனால், பௌத்த சிற்பங்களும் மிச்சங்களும் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இது ஒரு பௌத்த ஸ்தலமாகவே இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. பண்டைய பொதுகே துறைமுகம் மிகப் பெரியதாக இருந்திருக்கக்கூடும். பண்டக சாலைகள், தொழிற் கூடங்கள் மற்றும் குடியிருப்பு கள் அடங்கிய பெரிய நகர மாகவே இருந்திருக்கலாம். ஆகவே, வீராம்பட்டினம், காக் காயந்தோப்பு, அருகன்மேடு, சின்னவீராம்பட்டினம் ஆகியவை ஒன்று சேர்ந்து பழைய பொதுகேயாக இருந் திருக்கக்கூடும். பொதுகே பகுதியில் சமண பௌத்தத் துறவிகளுக்கான தவப்பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடம் சாக்கியன் தோப்பு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதுவே மருவி இன்று காக்கயன்தோப்பு என்று அழைக்கப்படுகிறது. இது பௌத்த நினைவின் மிச்சம்.

1779-ம் ஆண்டு வரை அரிக்கமேட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை எவரும் உணர்ந்திருக்கவில்லை. இந்தப் பகுதியில் செங்கல் சூளைகள் அதிகமாக இருந்திருக்கின்றன. அப்படி ஒரு செங்கல் சூளைக் காகத் தோண்டப்பட்ட குழிக்குள் சீனக் களிமண் ஜாடிகள் கண் டெடுக்கப்பட்டன. அதன் பிறகே இங்கு அகழ்வாய்வுப் பணி செய்யப்பட்டது.

அரிக்கமேட்டின் பெருமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் லெழாந்துய் என்ற பிரெஞ்சுக்காரர். வானவியல் ஆய்வுக்காக புதுச்சேரியில் தங்கியிருந்த இவர், வரலாற்றுச் செய்திகளில் ஆர்வம்கொண்டு இந்தப் பகுதியை ஆராய்ந்தார். இவர் சேகரித்த தகவல்களைக்கொண்டு இவர் எழுதிய நூலில் அரிக்கமேட்டின் சிறப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, ஒரு நூற்றாண்டு காலம் யாரும் இந்தப் பகுதியில் எந்த ஆய்வும் நடத்தவில்லை. 1937-ல் புதுச்சேரி பிரெஞ்சுக் கல்லூரிப் பேராசிரியர் ழுவோ துய்ப்ராய், அரிக்கமேடு பகுதியில் காணப்பட்ட மண்பாண்டங்கள், மணிகள் ஆகியவற்றைச் சேகரித்து விரிவான ஓர் ஆய்வு நடத்தி, லெ செமோர் என்ற ஆய்வு இதழில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஆர்வம்கொண்டு வியட் நாமில் இருந்து கொலுபேவ் என்ற அறிஞர் அரிக்கமேட்டுக்கு வந்தார். அவர் பல்வேறு தொல்பொருள் ஆய்வுகளை நடத்தி, அதன் வரலாற்றுத் தொன்மையை ஆராய்ந்தார். 1940-ம் ஆண்டு சென்னை அருங்காட்சியகத் தலைவராக இருந்த ஐயப்பன், அரிக்க மேட்டில் ஆய்வு நடத்தி, தொல்பொருள் சின்னங்களை சேகரித்தார். அரிக்கமேடு என்பது தென்னிந்தியாவின் தட்சசீலம் போன்றது என்று, ஐயப்பன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிறகு, 1944-ல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனராக இருந்த மார்ட்டிமர் வீலர் அரிக்கமேட்டைப் பற்றி கேள்விப்பட்டு, புதுவைக்கு வந்தார். இங்கு கிடைத்த சான்றுகளை ஆராய்ந்து, இதை விரிவாக ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் அரிக்கமேட்டில் தீவிர அகழ்வாய்வு செய்யப்பட்டடன. அந்த ஆய்வில் கிடைத்த மட்கலங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டன.

கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், அரிக்கமேடு பானை எழுத்துகள் பற்றி எழுதிய கட்டுரை, உலகின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அரிக்கமேடு ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கின.

1941 முதல் 1992 வரை அரிக்க மேட்டில் செய்த பல்வேறு அகழ் வாய்வுகளில் மட்கலன்கள், மணி வகைகள், அணிகலன்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள், உறைகிணறுகள், சாயத்தொட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமலா பெக்லி தலைமை யில் நடந்த ஆய்வில் சங்கு வளையல்கள், காதணிகள், வண்ணம் தீட்டப் பயன்படும் குச்சிகள், மரச்சீப்பு, சுடுமண் விலங்கு பொம்மைகள், நீலக் கண்ணாடிக் கோப்பைத் துண்டுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஆம்போரா சாடி போன்றவை கிடைத்துள்ளன. பண்டைய காலங்களில் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் மது, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேமித்துவைக்க ஆம்போரா ஜாடிகளைப் பயன்படுத்துவர். இந்த ஜாடிகளை ரோமானியர்கள் தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். இது, மென்மையான களிமண்ணால் வனையப்பட்டு, பழுப்பு நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

ஆம்போரா ஜாடியின் அடிப்பகுதி கூர்மையாகவும், கழுத்துப் பகுதியில் இருபுறமும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இதை எடுத்துச் செல்வது எளிது. இந்த ஜாடிகள் கி.மு. 100-ல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதுபோலவே, மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்டு வந்த ரௌலெட்டே எனும் மட்கலன்கள் விசேஷமானவை. இந்தக் களிமண் இந்தியாவில் கிடைக்காது. உருக்கு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த மட்கலன்கள் ரோமானியர்களால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அழகுமிக்க இந்த மட்கலன்கள் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்திருக்கின்றன. களிமண் கூஜா ஒன்றும் அரிக்கமேட்டு ஆய்வில் கிடைத்துள்ளது. இது, ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுவது. குளிர்ந்த நீரை சேமித்துவைத்துக் குடிக்கப் பயன்படுத்தப்படும் இந்தக் கூஜா, கடற்பயணத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரிக்கமேடு அகழ்வாய்வுகள் வெளிப்படுத்திய கட்டடப் பகுதிகளுக்குள் முக்கியமானது, அதன் பண்டக சாலை. செவ்வக வடிவம்கொண்ட இந்தப் பண்டகசலை, பெரிய செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பண்டக சாலை ஆற்றங்கரையை நோக்கி இருக்கும்படி கட்டப்பட்டு இருக்கிறது. அதுபோலவே, துணிகளுக்கு சாயமிடும் சாயப் பட்டறைகளும், தொட்டிகளும் அரிக்கமேட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் இருந்து கழிவு நீர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக சிறு வாய்க்கால்கள் தனியே அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமானப் பணிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மறுபக்கம் போலவே இருக்கிறது. சங்குக் கண்ணாடி ரத்தினக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவை அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. இதைக் கருத்தில்கொள்ளும்போது, அங்கே மணி உருவாக்கும் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முற்றுப்பெறாத சங்கு வளையல்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன. சிறிய சங்குகளை அறுத்து காதணிகள் செய்திருக்கின்றனர்.  தாமிரத்தால் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, குழவிக்கற்கள், முதுமக்கள் தாழி, மரச்சுத்தி எனப் பல்வேறு அரிய பொருட்கள் அரிக்கமேடு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வணிகம் காரணமாக ரோமானியர்கள் தமிழகம் வந்திருந்தபோதும் அவர்களின் பண்பாடும் கலைகளும் தமிழகத்தில் ஊடுருவி, பண்பாட்டுக் கலப்பு ஏற்பட்டுள்ளது.  

ரோமானியர்கள் இந்தியாவுக்குக் கடலில் பயணம்செய்து வருவதற்கு பருவக்காற்றே முக்கிய துணையாக அமைந்திருந்தது. இந்தப் பயணங்கள் வடமேற்குப் பருவக் காற்று சாதகமாக வீசும் பருவகாலத்தில் நடந்திருக்கிறது. எகிப்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்படும் பயணம் ஜூலையிலும், இந்தியாவில் இருந்து எகிப்து செல்லும் பயணம் கோடையிலும் தொடங்கி இருக்கிறது. ஒரு பயண காலம் என்பது மூன்று மாதங்கள். ரோமானியர்கள் எகிப்திய துறைமுகத்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு செங்கடலின் கீழ்முகமாகப் பயணம் செய்து அரேபியத் துறைமுகமான மூசாவைக் கடந்து பாபல் ஜலசந்தி வழியாக அரேபியாவின் தெற்குத் துறைமுகமான கானேவில் தங்கி, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர்.  

அவர்களில் ஒரு பிரிவினர் அரபிக் கடலில் பயணம்செய்து குஜராத்தை அடைந்திருக்கின் றனர். மற்ற குழுவினர் மலபார் பகுதியை அடைந்து அங்கிருந்து கடல் வழியாக அரிக்கமேட் டுக்கு வந்திருக்கின்றனர். முசிறி மற்றும் அரிக்கமேடு துறைமுகங்கள், கப்பல்கள் வந்து தங்கும் தளமாக மட்டுமின்றி சரக்குகளை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு மாற்றி சிறிய துறைமுகங்களுக்கு செல்வதற்கு உதவி செய்வதற்கும் வசதியுள்ள இடமாக இருந்தன. அரிக்கமேட்டின் வட பகுதியில் தனியான படகுத்துறை ஒன்று இருந்தது. அரிக்கமேட்டை அடைந்த ரோமானியப் பொருட்கள் அங்கிருந்து வடக்கே வசவசமுத்திரம் தெற்கே அழகன் குளம் ஆகிய பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. பிறகு, அழகன் குளத்திலிருந்து வைகை ஆற்று வழியாக மதுரைக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பல்வேறு பொருட்கள் ரோமானியர்களால் இறக்குமதி செய்யப்பட்டது போலவே தந்தம், மிளகு, தேக்கு, அகில், வாசனைத் திரவியங்கள், பட்டு, முத்து ஆகிய பொருட்கள் தமிழகத்தில் இருந்து ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இந்த வணிக முயற்சிகளுக்கு ரோமானியப் பேரரசு, தமிழக மன்னர்களுடன் முறையான வணிக ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. வெளிநாட்டு வணிகர்களிடம் சுங்க வரி வசூலிக்கும் பழக்கம் அரிக்கமேட்டிலும் இருந்திருக்கிறது, இந்த வரிப் பணத்தைக்கொண்டு துறைமுகக் கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பழந் தமிழர் வாழ்வியலுக்கு சான்றாகத் திகழும் அரிக்கமேடு, மிக முக்கியமான வரலாற்றுப் பெட்டகம். அங்கே இன்னமும் முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதுவரை நடந்த முக்கிய ஆய்வுகள்கூட அயல்நாட்டினர் செய் தவைதான்.

சிந்துச் சமவெளி ஆய்வை மட்டுமே பிரதானமாகக் கவனம்கொள்ளாமல் இதுபோன்ற தொன்மையான இடங்களையும் இந்தியத் தொல்பொருள் துறை விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி ஆய்வுசெய்தால், அறியப்படாத உண்மைகள் உலகின் வெளிச்சத்துக்கு வரும்.

Arikamedu is an archaeological site in Kakkayanthope, Ariyankuppam Commune, Puducherry. It is located at a distance 7 km from its capital Pondicherry, in the Indian territory of Puducherry, where Mortimer Wheeler conducted his best-known excavation in the 1940s. Arikamedu - 'Arikan-medu or Poduke’ which literally means, ‘eroding mound’.roman lamps, glassware and gemm also been found at the site According to Wheeler, Arikamedu was a Tamil fishing village which was formerly a major Chola port dedicated to bead making and trading with Romantraders. Various Roman artifacts, such as a large number of amphorae bearing the mark of Roman potter schools VIBII, CAMURI and ITTA, have been found at the site, supporting the view on an ancient trade between Rome and the ancient Tamil country of present day south India. Now Arikamedu is a part of Ariyankuppam Commune. Arikamedu was an important bead making centre.

Arikamedu is known to have been inhabited from pre first century times and was more or less continually occupied until modern times